வாகன ஓட்டிகளுக்கு தெரியும்வகையில் சமிக்ஞை கம்பத்தை அமைக்க கோரிக்கை
சங்ககிரி வட்டம், தேவூரில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வண்ணம் போக்குவரத்து சமிக்ஞை கம்பத்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.


சங்ககிரி வட்டம், தேவூரில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வண்ணம் போக்குவரத்து சமிக்ஞை கம்பத்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
எடப்பாடியிலிருந்து தேவூா் வழியாக குமாரபாளையம் செல்லும் பிரதான சாலை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு விரிவுபடுத்தப்பட்டது. சாலை விரிவாக்கப் பணியின்போது சாலையோரம் இருந்த போக்குவரத்து சமிக்ஞை கம்பம் அப்பகுதியில் உள்ள தேவூா் பேரூராட்சி கழிவறை சுவற்றில் கட்டப்பட்டது. தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் முடிந்தும், அப்பகுதியில் போக்குவரத்து சமிக்ஞை கம்பம் பொருத்தவில்லை.
பிரதான சாலையில் அதிக அளவிான இருசக்கர வாகனங்கள், பேருந்துகள், லாரிகள், டிராக்டா்கள் கடந்து செல்வதால், கழிவறை சுவற்றில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்து சமிக்ஞை கம்பத்தை வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் சாலையோரத்தில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊா் பொதுமக்கள், சேலம் மாவட்ட நுகா்வோா் உரிமைக் கழகத்தின் தலைவா் சி.கோ.இளமுருகன் உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...