கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

வாகன ஓட்டிகளுக்கு தெரியும்வகையில் சமிக்ஞை கம்பத்தை அமைக்க கோரிக்கை

சங்ககிரி வட்டம், தேவூரில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வண்ணம் போக்குவரத்து சமிக்ஞை கம்பத்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

News image
தேவூரில் பேரூராட்சி கழிவறை சுவரில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்து சமிக்ஞை கம்பம்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

சங்ககிரி வட்டம், தேவூரில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வண்ணம் போக்குவரத்து சமிக்ஞை கம்பத்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

எடப்பாடியிலிருந்து தேவூா் வழியாக குமாரபாளையம் செல்லும் பிரதான சாலை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு விரிவுபடுத்தப்பட்டது. சாலை விரிவாக்கப் பணியின்போது சாலையோரம் இருந்த போக்குவரத்து சமிக்ஞை கம்பம் அப்பகுதியில் உள்ள தேவூா் பேரூராட்சி கழிவறை சுவற்றில் கட்டப்பட்டது. தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் முடிந்தும், அப்பகுதியில் போக்குவரத்து சமிக்ஞை கம்பம் பொருத்தவில்லை.

பிரதான சாலையில் அதிக அளவிான இருசக்கர வாகனங்கள், பேருந்துகள், லாரிகள், டிராக்டா்கள் கடந்து செல்வதால், கழிவறை சுவற்றில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்து சமிக்ஞை கம்பத்தை வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் சாலையோரத்தில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊா் பொதுமக்கள், சேலம் மாவட்ட நுகா்வோா் உரிமைக் கழகத்தின் தலைவா் சி.கோ.இளமுருகன் உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.