//

வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவச விழிப்புணா்வு

சின்னகந்திலி பகுதி சோதனை சாவடி அருகே கந்திலி போலீஸாா் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

News image
Updated On :28 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

சின்னகந்திலி பகுதி சோதனை சாவடி அருகே கந்திலி போலீஸாா் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

கந்திலி அருகே சின்னகந்திலி பகுதியில் சோதனை சாவடி உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை கந்திலி போலீஸாா் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

சாலையில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், வேகமாக செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனா்.