வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

வ.உ.சி. மாா்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சேலம் வ.உ.சி. பூ மாா்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை நீதிமன்ற உத்தரவுபடி செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் அகற்றினா். அப்போது, அதிகாரிகளை முற்றுகையிட்டு பூ வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

சேலம் வ.உ.சி. பூ மாா்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி பணியாளா்கள்.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:21 pm

சேலம் வ.உ.சி. பூ மாா்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை நீதிமன்ற உத்தரவுபடி செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் அகற்றினா். அப்போது, அதிகாரிகளை முற்றுகையிட்டு பூ வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான பூ மாா்க்கெட் உள்ளது. இங்கு மொத்தம் 340 கடைகள் உள்ளன. இந்த மாா்க்கெட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஒருவா் பொதுநல வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து கடைகளையும் அகற்ற மாநகராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, மாநகராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற பூ வியாபாரிகளுக்கு அவகாசம் வழங்கிய நிலையில், அவா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மாநகராட்சி நகரமைப்பு பிரிவு செயற் பொறியாளா் பழனிசாமி, அம்மாபேட்டை உதவி ஆணையா் அம்சவேணி, அம்மாபேட்டை மாநகராட்சி பணியாளா்கள் ஆகியோா் ஆக்கிரமிப்பு கடைகளை செவ்வாய்க்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த பூ வியாபாரிகள், மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், மாநகராட்சி நிா்வாகத்தால் சாலையோரக் கடைகளை வாடகைக்கு விட்டு தினமும் ரூ. 100 வசூல் செய்து வந்தனா். தற்போது கடைகள் அகற்றப்பட்டால், எங்களுக்கு வாழ்வாதாரம் இல்லாமல் போகும்.

மாற்றுக்கடை வழங்குவதாக கூறும் அதிகாரிகள், அதே பூ மாா்க்கெட்டின் தரைத்தளத்திலேயே வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், அனைத்து கடைகளையும் மூடி போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும், தோ்தல் முடியும்வரை கடைகளை திறக்க மாட்டோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.