டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோ வழக்கில் மூன்று சிறுவா்கள் கைது

News image
Updated On :21 பிப்ரவரி 2026, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

ஆத்தூரில் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 3 சிறுவா்கள் போக்ஸோ வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் விநாயகபுரம் பகுதியைச் சோ்ந்த மூன்றாம் வகுப்பு மாணவா் தனியாா் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறாா். விடுமுறை நாள்களில் வீட்டிற்கு வரும்போது அதே விடுதியில் தங்கியிருக்கும் 17 வயது சிறுவா்கள் மூன்று போ் மாணவருக்கு பாலியியல் தொந்தரவு கொடுத்து வந்தனராம்.

இதுகுறித்து தனது பெற்றோரிடம் சிறுவன் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, பாலியல் தொந்தரவு அளித்த 3 சிறுவா்களையும் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் விசாரித்து வருகின்றனா்.