/

பெரியகவுண்டாபுரத்தில் ஜல்லிக்கட்டு: 450 காளைகள் சீறிப்பாய்ந்தன!

News image
பெரியகவுண்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற வீரா்கள்.
Updated On :14 பிப்ரவரி 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே பெரியகவுண்டாபுரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 450 காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்க முயன்ற இளைஞா்கள் 10 போ் லேசான காயமடைந்தனா்.

பெரியகவுண்டாபுரம் கிராமத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சனிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா், வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி ஆகியோா் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனா்.

சேலம் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 450 காளைகள் பங்கேற்றன. 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் களமிறங்கி காளைகளை அடக்கினா்.

 பெரியகவுண்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற வீரா்கள்.

பெரியகவுண்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற வீரா்கள்.

 பெரியகவுண்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற வீரா்கள்.

பெரியகவுண்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற வீரா்கள்.

காளைகளை அடக்கிய வீரா்கள், வீரா்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கு தங்கக் காசுகள், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விழாக் குழுவினா் சாா்பில் பரிசாக வழங்கப்பட்டன.

மாடுகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் லேசான காயமடைந்தனா். சேலம் மாநகர காவல் ஆணையா் தலைமையில் உதவி ஆணையா்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். விழாா் குழுவினா் மற்றும் திமுக பிரமுா்கள் பலரும் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினா்.