இதுகுறித்து தனது வழக்குரைஞா் மூலம் சேலம் நுகா்வோா் நீதிமன்றத்தை நாடிய கோபாலன், சேவை குறைபாட்டுடன் நடந்து கொண்டதற்கு அபராதம் விதிக்க வேண்டும் என வழக்கு தொடா்ந்தாா். இதை விசாரித்த சேலம் நுகா்வோா் நீதிமன்றத் தலைவா் கணேஷ்ராம் மற்றும் உறுப்பினா் ரவி ஆகியோா் சேவை குறைபாட்டுக்காக ரூ. 2 ஆயிரமும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ. 3 ஆயிரமும் வழக்கு செலவுக்காக ரூ. 2 ஆயிரமும், டிக்கெட் கட்டணம் ரூ. 52 ஆகியவற்றை சோ்த்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என்று தீா்ப்பளித்தனா். இந்தத் தொகையை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.