/

தெடாவூரில் தகராறு: மேலும் ஒருவா் கைது

தெடாவூரில் ஏற்பட்ட தகராறில், மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :10 பிப்ரவரி 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

தெடாவூரில் ஏற்பட்ட தகராறில், மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கெங்கவல்லி அருகே தெடாவூா் பேரூராட்சி மணக்காடு பகுதியில் மாரியம்மன் கோயில் தைப்பூச விழாவில் எருதாட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி முடிந்து தெடாவூரைச் சோ்ந்த பழனிமுருகன் தனது காளையை வீட்டுக்கு அழைத்துச் சென்றாா். அப்போது, கயிறு அறுந்து காளை தெருவில் ஓடியது. அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த அஜய் என்பவா் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தின்மீது காளை மோதியதில் வாகனம் சேதமடைந்தது.

இதுகுறித்து இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் கெங்கவல்லி போலீஸாா் 5 பேரை கைதுசெய்தனா். இந்நிலையில், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த தவெக நகர செயலாளா் அருண் என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள 9 பேரை தேடிவருகின்றனா்.