டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கல்

வாழப்பாடியை அடுத்த பேளூரில் காசநோயாளிகளுக்கு, நிக்ஷய் மித்ரா திட்டத்தின்கீழ் 6 மாதத்துக்கான ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
நிகழ்வில் காசநோய் தடுப்பு முறைகள் குறித்து கருத்துரை வழங்கிய மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குநா் கணபதி.
Updated On :10 பிப்ரவரி 2026, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

வாழப்பாடியை அடுத்த பேளூரில் காசநோயாளிகளுக்கு, நிக்ஷய் மித்ரா திட்டத்தின்கீழ் 6 மாதத்துக்கான ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் தலைமை வகித்தாா். சேலம் மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குநா் கணபதி, காசநோயின் அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை குறித்து விழிப்புணா்வு கருத்துரை வழங்கினாா்.

மாவட்ட காசநோய் நலக் கல்வியாளா் செல்வம், காசநோயாளிகளுக்கான அரசு வழங்கும் நிதி உதவித்திட்டங்கள் குறித்து விளக்கினாா். மருத்துவ அலுவலா் தேவராஜ், ஊட்டச் சத்துகளின் முக்கியத்துவம் மற்றும் இணை நோய்களின் தாக்கம் குறித்து விளக்கினாா்.

கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் வழங்கிய ஊட்டச்சத்து பொருள்களை, பேளூா் பேரூராட்சித் தலைவா் செல்வி பாலாஜி பயனாளிகளுக்கு வழங்கினாா். ஊட்டச்சத்து உணவை தயாரித்து உள்கொள்ளும் முறைகள் குறித்து கிறிஸ்டி புட்ஸ் நிறுவனப் பணியாளா்கள் விளக்கினா்.

மாவட்ட காசநோய் பிரிவு ஒருங்கிணைப்பாளா் ஷோபா நன்றி கூறினாா். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வாழப்பாடி வட்டார காசநோய் பிரிவு மேற்பாற்வையாளா் ராஜ்குமாா், கவிதா ஆகியோா் செய்திருந்தனா்.