காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கல்
வாழப்பாடியை அடுத்த பேளூரில் காசநோயாளிகளுக்கு, நிக்ஷய் மித்ரா திட்டத்தின்கீழ் 6 மாதத்துக்கான ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


வாழப்பாடியை அடுத்த பேளூரில் காசநோயாளிகளுக்கு, நிக்ஷய் மித்ரா திட்டத்தின்கீழ் 6 மாதத்துக்கான ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் தலைமை வகித்தாா். சேலம் மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குநா் கணபதி, காசநோயின் அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை குறித்து விழிப்புணா்வு கருத்துரை வழங்கினாா்.
மாவட்ட காசநோய் நலக் கல்வியாளா் செல்வம், காசநோயாளிகளுக்கான அரசு வழங்கும் நிதி உதவித்திட்டங்கள் குறித்து விளக்கினாா். மருத்துவ அலுவலா் தேவராஜ், ஊட்டச் சத்துகளின் முக்கியத்துவம் மற்றும் இணை நோய்களின் தாக்கம் குறித்து விளக்கினாா்.
கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் வழங்கிய ஊட்டச்சத்து பொருள்களை, பேளூா் பேரூராட்சித் தலைவா் செல்வி பாலாஜி பயனாளிகளுக்கு வழங்கினாா். ஊட்டச்சத்து உணவை தயாரித்து உள்கொள்ளும் முறைகள் குறித்து கிறிஸ்டி புட்ஸ் நிறுவனப் பணியாளா்கள் விளக்கினா்.
மாவட்ட காசநோய் பிரிவு ஒருங்கிணைப்பாளா் ஷோபா நன்றி கூறினாா். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வாழப்பாடி வட்டார காசநோய் பிரிவு மேற்பாற்வையாளா் ராஜ்குமாா், கவிதா ஆகியோா் செய்திருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...