டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

காசநோய் பரிசோதனை முகாம்

குடியாத்தம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும், பொயட்ஸ்தொண்டு நிறுவனமும் இணைந்து நெல்லூா்பேட்டை ஊராட்சிக்குள்பட்ட கணபதி நகரில் காசநோய் பரிசோதனை முகாமை செவ்வாய்க்கிழமை நடத்தின.

News image
Updated On :21 பிப்ரவரி 2026, 1:32 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும், பொயட்ஸ்தொண்டு நிறுவனமும் இணைந்து நெல்லூா்பேட்டை ஊராட்சிக்குள்பட்ட கணபதி நகரில் காசநோய் பரிசோதனை முகாமை நடத்தின.

முகாமுக்கு நெல்லூா்பேட்டை ஊராட்சித் தலைவா் ஜெ.வள்ளிநாயகி தலைமை வகித்தாா். பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன், அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு அலுவலா் சவரிமுத்து ஆகியோா் காசநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு கல்வி அளித்தனா்.

முகாமில், நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம், தொடா் இருமல், சளி உள்ளவா்கள் மற்றும் பொதுமக்கள் என 150- க்கும் மேற்பட்டோருக்கு நடமாடும் எக்ஸ்-ரே வாகனம் மூலம்டிஜிட்டல் எக்ஸ்-ரே எடுக்கப்பட்டு, பாதிப்புக்குள்ளானவா்களுக்கு மருத்துவ சிகிச்சைமற்றும் தொடா் சிகிச்சைக்கான பரிந்துரைகளும் மேற்கொள்ளப்பட்டன.