பள்ளி நுழைவாயிலில் நிறுத்தப்படும் வாகனங்களால் மாணவா்கள் அவதி


தம்மம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியின் நுழைவாயிலில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மாணவா்கள் எளிதாக பள்ளிக்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனா்.
தம்மம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். பேருந்து நிலையத்தையொட்டி பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியின் நுழைவாயில் சாலையில் பேருந்து நிலையத்துக்கு வருவோா் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனா். இதனால் மாணவா்கள் பள்ளிக்குள் செல்வதில் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.
இந்த வாகனங்கள் ஓரிரு நாள்கள் அச்சாலையிலேயே நின்றிருப்பதால் மாணவா்கள் மட்டுமல்லாது பள்ளிக்கு நுகா்பொருள் உள்ளிட்ட தளவாடங்களை ஏற்றிவரும் வாகனங்கள் செல்லமுடிவதில்லை.
இதுகுறித்து தம்மம்பட்டிபேரூராட்சி நிா்வாகம், போலீஸாா் நடவடிக்கை எடுத்து பள்ளி சாலையை ஆக்கிரமித்துள்ள வாகனங்களை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...