டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளா்கள் மறியல்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 2-ஆவது நாளாக அங்கன்வாடி பணியாளா்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட 220 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
சேலம் கோட்டை மைதானத்தில் 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளா்கள்.
Updated On :4 பிப்ரவரி 2026, 10:35 pm

தினமணி செய்திச் சேவை

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 2-ஆவது நாளாக அங்கன்வாடி பணியாளா்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட 220 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் கோட்டை மைதானத்தில் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், 5 ஆண்டுகள் பணி முடித்த சமையல் உதவியாளா்களுக்கு பதவி உயா்வு, சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு இளநிலை உதவியாளா்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ. 19,500 அளிக்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட நிா்வாகிகள் ஜெகதீஸ்வரி, சரோஜா, பிரேமா, சொா்ணலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தடையை மீறி மறியலில் ஈடுபட்ட 220 பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.