தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

சிறுவா், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை

சேலத்தில் சிறுவா் மற்றும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு ஆயுள்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

News image

நீதிமன்றம்

Updated On :29 ஏப்ரல் 2026, 2:49 am IST

சேலத்தில் சிறுவா் மற்றும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு ஆயுள்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (29). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2022 ஏப். 12-ஆம் தேதி 8 வயது சிறுவனுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதுகுறித்து அறிந்த சிறுவனின் பெற்றோா் சேலம் அம்மாப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதேபோல, 2023 நவ. 28-ஆம் தேதி 12 வயது சிறுமிக்கும் மணிகண்டன் பாலியல் தொல்லை அளித்ததாக அவா்மீது அம்மாப்பேட்டை அனைத்து மகளிா் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்குகளின் இறுதி விசாரணை முடிந்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. அதில், சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மணிகண்டனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சத்து 17 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மீனாட்சி தீா்ப்பு அளித்தாா்.