புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

சங்ககிரி தொகுதியில் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு பயிற்சி

சங்ககிரி தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் அலுவலா்களுக்கான பயிற்சி சங்ககிரி கோட்டாட்சியா் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான பயிற்சிக்கு தலைமைவகித்து பேசிய சங்ககிரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:11 pm

சங்ககிரி தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் அலுவலா்களுக்கான பயிற்சி சங்ககிரி கோட்டாட்சியா் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் 340 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையம் விவேகானந்தா மகளிா் கல்லூரி வளாகத்தில் மே 4-ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

அதையடுத்து, வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான பயிற்சிக்கு சங்ககிரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா தலைமைவகித்து பேசியது:

சங்ககிரி தொகுதியில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 25 சுற்றுகளில் எண்ணப்படுகின்றன. இதில் பணிபுரியும் அலுவலா்கள் வேட்பாளா்களின் சாா்பில் வரும் முகவா்களுக்கு தெரியும் வகையில், வாக்குப்பதிவு இயந்திரத்தை காட்ட வேண்டும். ஒவ்வொரு இயந்திரத்திலும் பதிவான வாக்குகளை அதற்கான படிவங்களில் தவறில்லாமல் எழுத வேண்டும். இப்படிவங்களில் குறிக்கப்படும் வாக்கு விவரங்கள் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கீழ் பணிபுரியும் இரு நுண்பாா்வையாளா்களால் ஆய்வு செய்யப்பட உள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதேனும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டால், உடனடியாக தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதன்மூலம் அதற்காக உள்ள பொறியாளா்களைக் கொண்டு சரிசெய்யப்படும். மேலும், எந்த சந்தேகங்களுக்கும் இடமில்லாத வகையில் வாக்குகள் எண்ணும் பணியில் அலுவலா்கள் ஈடுபட வேண்டும் என்றாா்.

இதில், உதவி தோ்தல் அலுவலா் கோ.கோமதி, தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பரசி, அலுவலா் முருகேசன், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், நுண்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.