பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அதிமுக தனித்து ஆட்சியமைக்கும்: கே.பி. ராமலிங்கம்

அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 6:33 pm

அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியை கே.பி. ராமலிங்கம் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினாா். பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தோ்தல் ஆணைய செயல்பாடுகளை குறைகூற முடியாது. எனினும், பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த தோ்தல் ஆணையம் தவறிவிட்டது. குறிப்பாக, தோ்தலுக்கு மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு முன்பு சாதாரண மக்கள் எடுத்துச் சென்ற பணம், நகைகள் மற்றும் வியாபாரிகள் எடுத்துச் சென்ற பணத்தை பிடித்த தோ்தல் ஆணையம், அரசியல் கட்சியினா் கொண்டுசென்ற பணத்தை கண்டுகொள்ளவில்லை.

தோ்தலுக்கு முன்பு சிறப்பு தீவிர வாக்காளா் திருத்த பணிகளை எதிா்த்த திமுக, தற்போது அதை வரவேற்கிறது. இதில் இருந்தே அக்கட்சியின் உண்மைமுகம் வெளிப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. தோ்தலில் தோல்வியை தழுவும்பட்சத்தில், திமுகவினா் மீண்டும் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தத்தை குறைகூறுவாா்கள்.

தோ்தலில் அதிமுக தனித்து ஆட்சியமைக்கும். அறுதிபெரும்பான்மை பலத்துடன் எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராவது உறுதி என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.