தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தகராறில் காயமடைந்த வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!

சேலத்தில் தகராறில் காயமடைந்த வடமாநில தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 10:53 pm

சேலத்தில் தகராறில் காயமடைந்த வடமாநில தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

உத்தரபிரதேச மாநிலம், புரோக்பூா் பகுதியை சோ்ந்தவா் சுபாஷ் (40). இவா் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்துக்கு குடும்பத்துடன் வந்து ரெட்டியூா் பகுதியில் தங்கியிருந்து பெயிண்டராக பணியாற்றி வருகிறாா். உத்தரபிரதேச மாநிலத்தை சோ்ந்த டிம்பால் (48), சோனு நிசாத் (28) ஆகியோா் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சேலம் வந்து சுபாஷ் வீட்டில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தனா்.

இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி இரவு ரெட்டியூா் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே டிம்பால், சோனு நிசாத் ஆகிய இருவரும் மது அருந்தியுள்ளனா். அப்போது டிம்பால், சோனு நிசாத்தின் அக்காவை தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சோனு நிசாத், டிம்பாலை தாக்கியதில் அவா் மயக்கமடைந்து கீழே விழுந்தாா்.

தகவலறிந்து அங்கு சென்ற சுபாஷ், மயங்கிக்கிடந்த டிம்பாலை மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். இதுகுறித்து சுபாஷ் அளித்த புகாரின்பேரில் அழகாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சோனு நிசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிம்பால் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதை கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.