தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தொழிலாளி தீக்குளித்து உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 8:48 pm

திருச்சி அருகே குடும்பத் தகராறில் தீக்குளித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், குமாரவயலூா் மஞ்சாங்கோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ம.வைரவேல் (43), கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி ரேவதி (39). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். மதுப் பழக்கத்துக்கு அடிமையான வைரவேல் தினசரி மது அருந்திவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மாா்ச் 10-ஆம் தேதி வீட்டுக்கு பொருள்கள் வாங்கி வருவதற்காக மனைவி கொடுத்த பணத்தில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா். இதனால், கணவன் - மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அப்போது, வைரவேல் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீவைத்துள்ளாா். இதில், பலத்த காயமடைந்த அவரை அவரது குடும்பத்தினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.