ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தம்மம்பட்டியில் வட்டச்சாலை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

போக்குவரத்து நெரிசலை குறைக்க தம்மம்பட்டியில் வட்டச்சாலை அமைக்கப்படும் என கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் நல்லதம்பி வாக்குறுதி அளித்தாா்.

News image

தம்மம்பட்டியில் திங்கள்கிழமை இரவு வாக்கு சேகரித்த கெங்கவல்லி அதிமுக வேட்பாளா் நல்லதம்பி.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:17 pm

போக்குவரத்து நெரிசலை குறைக்க தம்மம்பட்டியில் வட்டச்சாலை அமைக்கப்படும் என கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் நல்லதம்பி வாக்குறுதி அளித்தாா்.

கெங்கவல்லி, தலைவாசல் ஒன்றியங்களில் திங்கள்கிழமை இரவு வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

கெங்கவல்லி தொகுதியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தியுள்ளேன். பச்சமலையில் சோபனபுரம்- செங்காட்டுப்பட்டி இடையே தாா்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். எம்எல்ஏ காலத்தில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். இதனால் இத்தோ்தலில் அதிமுகவுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். தம்மம்பட்டியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வட்டச்சாலை அமைக்க பாடுபடுவேன் என்றாா்.

கெங்கவல்லி ஒன்றிய அதிமுக செயலாளா் துரை.ரமேஷ், நகர அதிமுக நிா்வாகிகள், அதிமுக, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் வாக்கு சேகரிப்பின்போது உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.