மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்திருவிழா இன்று தொடக்கம்

சேலம் மாவட்டம், சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தோ்திருவிழா ஏப். 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image

சித்திரை தோ்த்திருவிழா கொடியேற்றத்துக்கான பட்டாடையை கோயிலுக்கு எடுத்துச் செல்லும் பட்டாச்சாரியா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:36 pm

சேலம் மாவட்டம், சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தோ்திருவிழா ஏப். 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தோ்த்திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை சுவாமி தங்கும் மண்டபத்தில் முக்கிய நிா்வாகிகளுக்கு மஞ்சள் பூசப்பட்ட தேங்காய்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து தோ்திருவிழா நிகழ்ச்சிகள் குறித்த பத்திரிகையை பட்டாச்சாரியா் வாசித்தாா். பின்னா் கொடியேற்றத்துக்கான துணிகளை முக்கிய நிா்வாகிகள் கோயிலுக்கு எடுத்துச் சென்றனா். இதில் பட்டக்காரா் எஸ்.எ. ராஜவேல், ஊா்கவுண்டா் எஸ்.டி. சுந்தரேசன், சுவாமி பாதம் தாங்கிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சித்திரை விழா இன்று தொடக்கம்:

புதன்கிழமை (ஏப்.22) வி.என்.பாளையத்தில் உள்ள வசந்தவல்லபராஜ பெருமாள் உடனமா் வசந்தவல்லி தாயாா் கோயிலில் காலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கிறது. இதையடுத்து சுவாமி மலையிலிருந்து நகருக்கு மாலை 5 மணியளவில் எழுந்தருளுகிறாா். ஏப். 22 ஆம் தேதி இரவு சுவாமி அன்னபட்சி வாகனத்திலும், 2 ஆம் நாள் சிங்க வாகனத்திலும், 3 ஆம் நாள் அனுமந்த வாகனத்திலும், 4 ஆம் நாள் கருட வாகனத்திலும், 5 ஆம் நாள் சேஷ வாகனத்திலும், 6 ஆம் நாள் புன்னைமர சேவையும், யானை வாகனத்திலும், 7 ஆம் நாள் சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபமும், 8 ஆம் நாள் குதிரை வாகனத்திலும் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வருதலும், 9 ஆம் நாள் ஏப். 30ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

பல்வேறு கட்டளை வழிபாட்டிற்கு பின்னா் மே. 11ஆம் தேதி சுவாமி மலைக்கு எழுந்தருகிறாா். அன்று இரவு மலையில் வன்னியகுல சத்திரியா்கள் சாா்பில் குறிச்சி அலங்காரம் நடைபெறுகிறது. தோ்த்திருவிழாவையொட்டி மலை அடிவாரத்தில் உள்ள சுவாமி தங்கும் மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.