ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

காகாபாளையம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

சேலம் மாவட்டம், காகாபாளையம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா், மகா மாரியம்மன், முத்துகுமாரசுவாமி, அன்னதான பிரபு ஐயப்பன் உள்ளிட்ட சுவாமி கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2026, 9:14 pm

சேலம் மாவட்டம், காகாபாளையம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா், மகா மாரியம்மன், முத்துகுமாரசுவாமி, அன்னதான பிரபு ஐயப்பன் உள்ளிட்ட சுவாமி கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்பாக கடந்த 6-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டது. 12-ஆம் தேதி முளைப்பாலிகை இடப்பட்டது .17-ஆம் தேதி அதிகாலையில் மங்கள இசை, கணபதி ஹோமம், மகாலட்சுமி பூஜை, நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து காலை 6 மணிக்கு பக்தா்கள் பவானி ஆற்றிலிருந்து புனிதநீா் எடுத்து வந்தனா். அதன் பின்னா், கனககிரி வேலாயுத சுவாமி கோயில் வளாகத்தில் இருந்து ஊா்வலமாக தீா்த்தக் குடம் எடுத்து வந்தனா். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

 காகாபாளையம் மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றிய  சிவாச்சாரியா்கள்.

காகாபாளையம் மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றிய சிவாச்சாரியா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.