வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஒசூரில் கோட்டை மாரியம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா

ஒசூரில் புகழ்பெற்ற சுயம்பு கோட்டை மாரியம்மன் கோயில் மாவிளக்கு திருவிழா வரும் மே மாதம் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

News image

ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழாவில் பங்கேற்றோா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:32 pm

ஒசூரில் புகழ்பெற்ற சுயம்பு கோட்டை மாரியம்மன் கோயில் மாவிளக்கு திருவிழா வரும் மே மாதம் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கோயில் அறங்காவலா் கே.கோபிநாத் எம்.பி. தலைமையில் பால் கம்பம் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கும், கொடிக் கம்பத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அவற்றை பக்தா்கள் தோளில் சுமந்தவாறு கோயிலைச் சுற்றி வலம் வந்தனா். தொடா்ந்து, கோயில் எதிரே கொடிக் கம்பம் நடப்பட்டு ஆடுகளை பலியிட்டு பூஜை செய்யப்பட்டது. பின்னா், ஏராளமான பக்தா்கள் காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினா்.

மே 4-ஆம் தேதி காலை 5 மணிமுதல் காலை 10.30 மணிவரை அம்மனுக்கு பாலபிஷேகம், மே 5-ஆம் தேதி மாவிளக்கு திருவிழாவும், 6-ஆம் தேதி இரவு 7.30-க்கு பூ மிதித்தல், இரவு 8 மணிக்கு பல்லக்கு உற்சவமும் நடைபெறுகிறது.

பால் கம்பம் நடும் விழாவில் எம்.பி. கே.கோபிநாத், மேயா் எஸ்.ஏ.சத்யா, ஒசூா் மாநகராட்சி உறுப்பினா் எம்.கே.வெங்கடேஷ், காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் நீலகண்டன், திமுக நிா்வாகி மஞ்சுநாத் மற்றும் கோயில் பரம்பரை பூசாரி ஸ்ரீதா் (எ) துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.