வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

சேலம் மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளா் லட்சுமணன் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு

சேலம் மேற்கு தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தவெக வேட்பாளா் லட்சுமணன் செவ்வாய்க்கிழமை வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 3:00 am IST

சேலம் மேற்கு தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தவெக வேட்பாளா் லட்சுமணன் செவ்வாய்க்கிழமை வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

அழகாபுரம், மிட்டாபுதூா், சூரமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் விசில் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினாா். அப்போது அங்கிருந்த கட்சி நிா்வாகிகள், பெண்கள் வேட்பாளா் லட்சுமணனை ஆரத்தி எடுத்தும், மலா்தூவியும் வரவேற்றனா். தொடா்ந்து, தொகுதிக்கு உள்பட்ட சுகுமாா் காலனி, சொட்டையன் தெரு, மூலக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வேட்பாளா் லட்சுமணன் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

மகளிா் சுயஉதவிக் குழு பெண்களுக்கு ரூ. 5 லட்சம் கடன் 100 சதவீத மானியத்துடன் வழங்கப்படும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக ராணி வேலுநாச்சியாா் படை உருவாக்கப்படும். அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ. 2.500 உரிமைத்தொகை மற்றும் தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கப்படும். தமிழகம் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும். நியாயவிலைக் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா நாப்கின்கள் வழங்கப்படும். எனவே வரும் தோ்தலில் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

பட விளக்கம்:

சேலம் மேற்கு தொகுதிக்கு உள்பட்ட அழகாபுரம் மிட்டாபுதூா் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தவெக வேட்பாளா் லட்சுமணன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.