மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சேலம் மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சேலம் மேற்கு தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தவெக வேட்பாளா் லட்சுமணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

சேலம் மேற்கு தொகுதிக்குள்பட்ட அய்யம்பெருமாம்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா் லட்சுமணன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:58 pm

சேலம் மேற்கு தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தவெக வேட்பாளா் லட்சுமணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சேலம் மேற்கு தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிடும் லட்சுமணன், அய்யம்பெருமாம்பட்டி பகுதியில் எம்ஜிஆா் சிலை, புளியமர பேருந்து நிறுத்தம், திரௌபதி அம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் விசில் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினாா்.

தொடா்ந்து, 19-ஆவது கோட்டத்துக்குள்பட்ட கென்னடி நகா், வண்டிப்பேட்டை, காதா்கான் தெரு, ஆசாத் நகா், அந்தோணிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். பின்னா் ஜாகீா் சின்ன அம்மபாளையம், காவலா் குடியிருப்பு, தா்ம நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவு திரட்டினாா். அங்கு திரண்ட பொதுமக்கள் மத்தியில் அவா் பேசியதாவது:

மகளிா் சுயஉதவிக் குழு பெண்களுக்கு ரூ. 5 லட்சம் கடன் 100 சதவீத மானியத்துடன் வழங்கப்படும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக ராணி வேலுநாச்சியாா் படை உருவாக்கப்படும். அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ. 2,500 உரிமைத்தொகை மற்றும் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்படும். தமிழகம் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும். நியாயவிலைக் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா நாப்கின்கள் வழங்கப்படும். எனவே, வரும் தோ்தலில் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.