மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து திண்டுக்கல் லியோனி பிரசாரம்

தம்மம்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளா் சின்னதுரையை ஆதரித்து பேசிய திண்டுக்கல் லியோனி.

News image

தம்மம்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளா் சின்னதுரையை ஆதரித்து பேசிய திண்டுக்கல் லியோனி.

Updated On :10 ஏப்ரல் 2026, 7:16 pm

கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து தலைவாசல், வீரகனூா், தெடாவூா், கெங்கவல்லி ஆகிய ஊா்களின் பேருந்து நிலையங்களில் திமுக பேச்சாளா் திண்டுக்கல் லியோனி வெள்ளிக்கிழமை வேனில் பிரச்சாரம் செய்தாா்.

தொடா்ந்து, தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமை வகித்தாா். நகர திமுக செயலாளா் சண்முகம், ஒன்றிய திமுக செயலாளா் ஆா்.சித்தாா்த்தன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் திருச்செல்வன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில் திமுக வேட்பாளா் சின்னதுரை பேசுகையில், ரூ. 100 கோடி மதிப்புள்ள சேரடி அணைக்கட்டு திட்டத்தை செயல்படுத்துவேன், தம்மம்பட்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வட்டச்சாலை உள்ளிட்டவற்றை அமைத்து தருவேன் என்றாா்.

தொடா்ந்து திண்டுக்கல் லியோனி பேசுகையில், பள்ளியில் காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்புவரை நீட்டிக்கப்படும், மகளிா் உரிமைத்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவித்தொகைகள் தோ்தல் அறிக்கையில் கூறியபடி கூடுதலாகும். தமிழகத்தில் 200 தொகுதிகளில் திமுக வெற்றிபெற்று இந்த ஆட்சி மீண்டும் தொடரும். எனவே, சின்னதுரைக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.