மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அறச்சலூரில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்!

மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் செந்தில்நாதனை ஆதரித்து அறச்சலூரில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பேசினாா்.

News image

அறச்சலூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் மதிமுக பொதுச்செயலாளா் வைகோ.

Updated On :18 ஏப்ரல் 2026, 8:48 pm

மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் செந்தில்நாதனை ஆதரித்து அறச்சலூரில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பேசினாா்.

கூட்டத்தில் அவா் பேசியதாவது: பிஎம் கிஸான் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி வாக்கு கேட்பது சரியல்ல.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு எடுத்த முடிவை முறியடித்த தமிழக முதல்வா் ஸ்டாலினை அனைத்து மாநிலங்களும் பாராட்டி வருகின்றன.

தமிழகம் பாதுகாக்கப்பட வேண்டும், நதிகள் பாதுகாக்கப்பட வேண்டும், தமிழக மக்களின் வாழ்வாதாரம் பாதுக்கப்பட வேண்டும் என்றால் தமிழகத்தில் திமுக அரசு நீடிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் திமுக, மதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.