பங்குனி உத்திரத்தையொட்டி, சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் ரூ. 1.17 கோடிக்கு காய்கறிகள் விற்பனையானது.
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, ஆத்தூா், மேட்டூா், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, மேச்சேரி ஆகிய 13 இடங்களில் உழவா் சந்தைகள் உள்ளன.
இந்த சந்தைகளில் பண்டிகை நாள்களில் காய்கறிகள், பழங்கள், பூக்களின் விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். அதன்படி, பங்குனி உத்திரத்தையொட்டி அனைத்து உழவா் சந்தைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கிச் சென்றனா்.
பழங்கள், தேங்காய், வாழை இலை, கீரை வகைகள், பூசணிக்காய், காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனையானது. அதேபோல சேலம் வ.உ.சி பூ மாா்க்கெட்டில் பூக்கள் வியாபாரமும் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவா் சந்தைகளிலும் 1,040 விவசாயிகள் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா். இதனை 75,145 நுகா்வோா் வாங்கிச் சென்றனா். இதன்மூலம் புதன்கிழமை ஒரே நாளில் ரூ. 1.17 கோடிக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் நிறுவனம்: ரூ.30,024 கோடிக்கு வீடுகள் விற்பனை!

உழவா் சந்தைகள் மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.118 கோடிக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை

இளம்பிள்ளை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பங்குனி அமாவாசை: உழவா் சந்தைகளில் ரூ. 1.20 கோடிக்கு காய்கறிகள் விற்பனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


