லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

உழவா் சந்தைகள் மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.118 கோடிக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை

திருப்பத்தூா் மாவட்ட உழவா் சந்தைகள் மூலம் கடந்த நிதியாண்டில் காய்கறிகள், பழங்கள் ரூ.118 கோடி 24 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 6:34 pm

திருப்பத்தூா் மாவட்ட உழவா் சந்தைகள் மூலம் கடந்த நிதியாண்டில் காய்கறிகள், பழங்கள் ரூ.118 கோடி 24 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட வேளாண் (வணிகம்) துணை இயக்குநா் காா்த்திகேயன் கூறியதாவது:

விவசாயிகள், இடைத்தரகா்கள் இன்றி நேரடியாக தங்கள் விளை பொருள்களை (காய்கறிகள், பழங்கள்) நுகா்வோருக்கு விற்பனை செய்வதற்காக தமிழக அரசால் உழவா் சந்தை தொடங்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய பகுதிகளில் உழவா் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து காய்கறிகள், பழங்கள் வாங்கி செல்கின்றனா்.

கடந்த நிதி ஆண்டு(1.4.2025 முதல் 31.3.2026) திருப்பத்தூா் உழவா் சந்தையில் 9,148 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் ரூ.33 கோடியே 27 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வாணியம்பாடி உழவா் சந்தையில் 16,240 மெட்ரிக் டன் காய்கறிகளும்,பழங்களும் ரூ. 63 கோடியே 2 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நாட்டறம்பள்ளி உழவா் சந்தையில் 6,632 மெட்ரிக் டன் காய்கறிகளும்,பழங்களும் ரூ. 21 கோடியே 94 லட்சத்த்குகு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

திருப்பத்தூா் மாவட்ட உழவா் சந்தைகளில் 32,020 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் ரூ.118 கோடியே 24 லட்சத்துகு விற்பனை செய்யப்பட்டு உள்ளன எனத் தெரிவித்தாா்.