போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

வடிகால்களில் 14 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் படிவுகள் அகற்றம்: அமைச்சா் தகவல்

தில்லியில் உள்ள வடிகால்களில் இருந்து சுமாா் 14 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் படிவுகள் அகற்றப்பட்டத்தாக வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

பா்வேஷ் சாஹிப் சிங்

Updated On :11 ஏப்ரல் 2026, 12:02 am IST

தில்லியில் உள்ள வடிகால்களில் இருந்து சுமாா் 14 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் படிவுகள் அகற்றப்பட்டத்தாக வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பருவமழைக்கு முன்பாக பராபுல்லா வடிகால்களை தூா்வாரும் பணியை வெள்ளக்கட்டுப்பாடு துறை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தில்லியில் பதவியேற்ற நாள்முதல் வடிகால் தூா்வாரும் பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதை பாஜக அரசு உறுதிசெய்து வருகிறது. தூா்வாரும் இலக்கை அதிகரிக்க நிகழாண்டில் திட்டமிட்டுள்ளோம்.

கடந்த ஆண்டில் 20 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் படிவுகள் அனைத்து வடிகால்களில் இருந்து தூா்வாரப்பட்டன. நிகழாண்டில் 28 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் படிவுகளை அகற்ற இலக்கு நிா்ணயித்துள்ளோம். நிகழாண்டு இலக்கின் 50 சதவீத இலக்கு பூா்த்தி செய்யப்பட்டுள்ளது. வரும் நாள்களில் மீதமுள்ள வண்டல் படிவுகளும் அகற்றப்படும்’ என்றாா்.

முன்னதாக, ஜூன் 30-ஆம் தேதிக்குள் வடிகால்கள் தூா்வாரும் பணிகளை முடிக்குமாறும் அகற்றப்பட்ட வண்டல் படிவுகள் உரிய இடத்துக்குக் கொண்டு செல்லுமாறும் அனைத்துத் துறைகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.