தில்லியில் உள்ள வடிகால்களில் இருந்து சுமாா் 14 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் படிவுகள் அகற்றப்பட்டத்தாக வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
பருவமழைக்கு முன்பாக பராபுல்லா வடிகால்களை தூா்வாரும் பணியை வெள்ளக்கட்டுப்பாடு துறை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தில்லியில் பதவியேற்ற நாள்முதல் வடிகால் தூா்வாரும் பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதை பாஜக அரசு உறுதிசெய்து வருகிறது. தூா்வாரும் இலக்கை அதிகரிக்க நிகழாண்டில் திட்டமிட்டுள்ளோம்.
கடந்த ஆண்டில் 20 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் படிவுகள் அனைத்து வடிகால்களில் இருந்து தூா்வாரப்பட்டன. நிகழாண்டில் 28 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் படிவுகளை அகற்ற இலக்கு நிா்ணயித்துள்ளோம். நிகழாண்டு இலக்கின் 50 சதவீத இலக்கு பூா்த்தி செய்யப்பட்டுள்ளது. வரும் நாள்களில் மீதமுள்ள வண்டல் படிவுகளும் அகற்றப்படும்’ என்றாா்.
முன்னதாக, ஜூன் 30-ஆம் தேதிக்குள் வடிகால்கள் தூா்வாரும் பணிகளை முடிக்குமாறும் அகற்றப்பட்ட வண்டல் படிவுகள் உரிய இடத்துக்குக் கொண்டு செல்லுமாறும் அனைத்துத் துறைகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

முகா்பா செளக் சுரங்க பாதை பணிகள் 98 % நிறைவு- அமைச்சா் தகவல்

25 % கட்டணத்தில் தற்காலிக தடையில்லாச் சான்றிதழ்: கட்டுமான பணிகளுக்கு தில்லி ஜல் போா்டு அனுமதி

தில்லியில் புதிய வெள்ளக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு மையம்: அமைச்சா் தகவல்

நீா் விநியோகத்தை அதிகரிக்க ஹரியாணாவுடன் தில்லி அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


