போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

முகா்பா செளக் சுரங்க பாதை பணிகள் 98 % நிறைவு- அமைச்சா் தகவல்

வடக்கு தில்லியில் வாகன நெரிசல் மிக்க முகா்பா செளக் பகுதியில் உள்ள சுரங்க பாதை பணிகள் 98 சதவீதம் முடிவடைந்துள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

(Photo: @p_sahibsingh/X)

Updated On :16 ஏப்ரல் 2026, 3:25 am IST

வடக்கு தில்லியில் வாகன நெரிசல் மிக்க முகா்பா செளக் பகுதியில் உள்ள சுரங்க பாதை பணிகள் 98 சதவீதம் முடிவடைந்துள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

வெளி வட்டசாலையில் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் முகா்பா செளக் சுரங்கபாதை அமைக்கும் பணிகள் கடந்த 2022-இல் தொடங்கப்பட்டன. சுரங்க பாதையில் நடைபெற்று பணிகளை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கட்டுமானப் பணிகளை பொதுப்பணித் துறை முடித்துள்ளது. இறுதிக்கட்ட பணிகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.

நெருக்கடி மிகுந்த வடக்கு தில்லியில் போக்குவரத்தை எளிதாக்க இரு சக்கர வாகனங்கள், பாதசாரிகள், மூன்று சக்கர வாகனங்களுக்கு என்று 3 சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பணிகள் 98 சதவீதம் முடிவடைந்த நிலையில், இந்த மாத இறுதிக்குள் சுரங்க பாதையை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் நீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் சாலையில் அதற்குத் தகுந்தவாறு சரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

எப்போதும் வாகன நெரிசல் மிக்கதாகக் காணப்படும் இப்பகுதியில் போக்குவரத்தை எளிதாக்க இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. நெருக்கடியான பிற பகுதிகளிலும் போக்குவரத்தை எளிதாக்க ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.