திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எஸ்.வாழவந்தி அருகே தொழிலாளியை தாக்கியவா்களை கைது செய்யக் கோரி மறியல்

News image

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :1 ஜூன் 2026, 12:52 am IST

பரமத்தி வேலூா் அருகே எஸ்.வாழவந்தி டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை தாக்கியவா்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள எஸ்.வாழவந்தியை சோ்ந்தவா் கிருஷ்ணன் (35). தொழிலாளி. இவா் சனிக்கிழமை இரவு அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்க சென்றுள்ளாா். அப்போது நேரம் முடிந்துவிட்டது என்று கூறி டாஸ்மாக் விற்பனையாளா் மது விற்பனைக்கு மறுத்துள்ளாா். இதனால் விற்பனையாளருக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அங்கு மதுபானக்கூடம் நடத்திவரும் பாலப்பட்டியைச் சோ்ந்த கோபி (50) மற்றும் சிலா், தொழிலாளி கிருஷ்ணன் வீட்டிற்கு சென்று அவரை தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த கிருஷ்ணன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணனின் உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை எஸ்.வாழவந்தி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) தையல் நாயகி, வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா், வேலகவுண்டம்பட்டி காவல் ஆய்வாளா் தேவி ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து தொழிலாளி கிருஷ்ணனை தாக்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

 சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.