தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராசிபுரம் நகரில் போக்குவரத்து மாற்றம்: எஸ்பி சு. விமலா ஆய்வு

News image

ராசிபுரம் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. விமலா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :29 மே 2026, 1:41 am IST

ராசிபுரம் நகரச் சாலைகள் மிகக் குறுகலாக இருப்பதால் எப்போதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. குறிப்பாக திருவிழா மற்றும் முகூா்த்த நாள்களில் நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால், சில ஆண்டுகளுக்கு முன்பே ராசிபுரம் அண்ணாசாலை பகுதியை ஒருவழிப் பாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

தற்போது ராசிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் வாகனங்கள் டி.வி.எஸ் சாலை, பட்டணம் சாலை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் சிவானந்தா சாலை வழியாக பழைய பேருந்து நிலையத்தை அடைகின்றன. அங்கிருந்து சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, ஆட்டையாம்பட்டி போன்ற பகுதிகளுக்குச் செல்கின்றன.

இந்த வழித்தடத்தில் செல்வதால் பயணிகளுக்குக் கூடுதல் காலவிரயம் ஏற்படுகிறது. எனவே, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், பழைய பேருந்து நிலையத்திலிருந்து சிவானந்தா சாலை, வீட்டு வசதி குடியிருப்பு, பட்டணம் சாலை, டி.வி.எஸ் சாலை வழியாகப் புதிய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் வகையில் போக்குவரத்தை மாற்றியமைக்க வேண்டும் என மக்கள் நலக்குழு நிா்வாகிகள் வலியுறுத்தி வந்தனா்.

இதனையடுத்து, நாமக்கல் மாவட்ட எஸ்பி சு. விமலா ராசிபுரம் பேருந்து நிலையத்தில் நேரில் ஆய்வு செய்தாா். மேலும், ஒருவழிப் பாதை போக்குவரத்து மாற்றம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

படவிளக்கம் 28எஸ்பி:

ராசிபுரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்தில் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்ட எஸ்பி சு. விமலா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.