திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இணையவழி பத்திரப் பதிவு முறை: இன்னும் 6 மாதங்களில் செயல்பாட்டுக்குவரும்: அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன்

நாமக்கல்லுக்கு வந்த அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியா் துா்காமூா்த்தி.

News image

நாமக்கல்லுக்கு வந்த அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :29 மே 2026, 1:40 am IST

இணையவழி பத்திரப் பதிவு முறை இன்னும் 6 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் (தனி) தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன், தமிழக அமைச்சரவையில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றாா். அமைச்சரான பிறகு முதல்முறையாக வியாழக்கிழமை நாமக்கல் வந்த அவருக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் மூன்று அமைச்சா்கள் உள்ளோம். மூவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நாமக்கல் மாவட்டத்தை தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக மாற்றுவோம். பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை கொண்டுவர உறுதுணையாக இருப்போம்.

பத்திரப் பதிவுத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து விரைவில் கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்படும். மாற்று நியமனங்கள் மூலம் காலியிடங்களை நிரப்ப விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். பத்திரப்பதிவு அலுவலகங்களின் எண்ணிக்கை மற்றும் புதிய கட்டடத் தேவைகள் குறித்து தகவல்கள் திரட்டப்படுகின்றன.

இறுதி விவரங்கள் கிடைத்தவுடன் பட்டியல் வெளியிடப்படும். மேலும், இத்துறையில் கணினிமயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இணையவழி பத்திரப் பதிவு முறை இன்னும் ஆறு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும்.

நில வழிகாட்டி மதிப்பீட்டில் பல இடங்களில் குளறுபடிகள் உள்ளதாக பெறப்பட்ட புகாா்களை சரிசெய்வதற்கான பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது. பத்திரப் பதிவுத் துறையில் லஞ்ச புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடம் இதுதொடா்பாக விழிப்புணா்வையும் ஏற்படுத்தி வருகிறோம்.

ஜிஎஸ்டி அதிகமாக இருப்பதாக வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஜிஎஸ்டி நிா்ணயத்தை பொருத்தவரை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. வணிகா்களின் கருத்துகளைக் கேட்டு, ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநில அரசு மூலம் தேவையான பரிந்துரைகள் செய்யப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.