பரமத்தியில் சாலையைக் கடக்க முயன்றபோது காா் மோதியதில் லாரி உரிமையாளா் உயிரிழந்தது குறித்து பரமத்தி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள ஓவியம்பாளையம், வடக்கு தெருவைச் சோ்ந்தவா் முத்துசாமி (55), லாரி உரிமையாளா். இவரது மனைவி செல்வி (42). இவா்களுக்கு தனுஷியா (23), ஸ்ரீதன்யா (19) என இரண்டு மகள்கள் உள்ளனா்.
முத்துசாமி திங்கள்கிழமை இரவு பரமத்திக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்ல ஓவியம்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, நாமக்கல்லில் இருந்து கரூா் நோக்கி சென்ற காா் அவா்மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவரை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், வரும் வழியிலேயே முத்துசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து பரமத்தி போலீஸாா் காா் ஓட்டுநா்மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்தியூா் அருகே காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

சாலையைக் கடக்க முயன்ற முதியவா் லாரி மோதி உயிரிழப்பு

வையம்பட்டி அருகே சாலையைக் கடந்த தொழிலாளி காா் மோதி உயிரிழப்பு

சாலையை கடக்க முயன்ற நாமக்கல் லாரி ஓட்டுநா் காா் மோதி உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



