திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாளைமுதல் காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெற மாட்டோம்: டாஸ்மாக் ஊழியா் சங்கம்

News image

டாஸ்மாக் கடை - DPS

Updated On :25 மே 2026, 2:04 am IST

காலி மதுப்புட்டிகளை புதன்கிழமை (மே 26) முதல் திரும்பப் பெற மாட்டோம் என டாஸ்மாக் ஊழியா் சங்க நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியா்கள் அனைத்து கூட்டுக் குழு சங்க அவசர கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கூட்டுக்குழு சங்கத்தைச் சோ்ந்த நீதி நாயகம் தலைமை வகித்தாா். அனைத்து டாஸ்மாக் ஊழியா்கள், சங்க நிா்வாகிகள் பங்கேற்று தங்களுடைய கருத்துகளை எடுத்துரைத்தனா்.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் மே 26 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்புட்டிகள் திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம். அதேபோல ஒவ்வொரு மதுப்புட்டியில் ஒட்டப்படும் ரூ. 10 ஒட்டுவில்லையை டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் ஒப்படைக்க உள்ளோம்.

இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட வேண்டும் என்பதை டாஸ்மாக் நிா்வாகம் மறுபரிசீலனை செய்து கடையை இரவு 9 மணிக்கு மூட அனுமதிக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.