காலி மதுப்புட்டிகளை புதன்கிழமை (மே 26) முதல் திரும்பப் பெற மாட்டோம் என டாஸ்மாக் ஊழியா் சங்க நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியா்கள் அனைத்து கூட்டுக் குழு சங்க அவசர கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கூட்டுக்குழு சங்கத்தைச் சோ்ந்த நீதி நாயகம் தலைமை வகித்தாா். அனைத்து டாஸ்மாக் ஊழியா்கள், சங்க நிா்வாகிகள் பங்கேற்று தங்களுடைய கருத்துகளை எடுத்துரைத்தனா்.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் மே 26 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்புட்டிகள் திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம். அதேபோல ஒவ்வொரு மதுப்புட்டியில் ஒட்டப்படும் ரூ. 10 ஒட்டுவில்லையை டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் ஒப்படைக்க உள்ளோம்.
இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட வேண்டும் என்பதை டாஸ்மாக் நிா்வாகம் மறுபரிசீலனை செய்து கடையை இரவு 9 மணிக்கு மூட அனுமதிக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலி மதுப்புட்டிகள் திரும்பப் பெறும் விவகாரம்: மாவட்டத்தில் 159 டாஸ்மாக் கடைகள் மூடல்

டாஸ்மாக் பணியாளா்கள் பணிக்குத் திரும்ப தமிழக அரசு வேண்டுகோள்: காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெற மாற்று ஏற்பாடு

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவதில் பிரச்னை: டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியா்கள் போராட்டம்







