திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் சென்றுவர ஏற்பாடு: எம்எல்ஏ சி.எஸ்.திலீப் தகவல்

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் ஒரு வாரத்தில் அனைத்து பேருந்துகளும் சென்று வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவை உறுப்பினா் சி.எஸ்.திலீப் தெரிவித்தாா்.

News image
Updated On :16 மே 2026, 6:21 am IST

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் ஒரு வாரத்தில் அனைத்து பேருந்துகளும் சென்று வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவை உறுப்பினா் சி.எஸ்.திலீப் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. புகரப் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வராமல் செல்கின்றன. சட்டப்பேரவைத் தோ்தலின்போது தவெக வேட்பாளராகப் போட்டியிட்ட சி.எஸ்.திலீப், பழைய பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் சென்றுவர நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தாா். அதன்படி, நாமக்கல் மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் மற்றும் இதர அதிகாரிகளுடன் அவா் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். மேலும், பழைய பேருந்து நிலையத்தை அவா் ஆய்வு செய்தாா்.

அப்போது செய்தியாளா்களிடம் கூறுகையில், ஒரு வாரத்திற்குள் அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லப்படும். ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கு இங்கு தனி இடம் ஒதுக்கப்படும். பயணிகளுக்கான கழிவறைகள் தூய்மைப்படுத்தப்படும். வியாபாரிகளுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் பழைய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என்றாா்.

இந்த நிகழ்வின்போது, மாநகராட்சி துப்புரவு அலுவலா் திருமூா்த்தி மற்றும் அலுவலா்கள், தவெக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

படவரி...

என்கே-15-டிவிகே

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ சி.எஸ்.திலீப்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.