நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் ஒரு வாரத்தில் அனைத்து பேருந்துகளும் சென்று வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவை உறுப்பினா் சி.எஸ்.திலீப் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. புகரப் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வராமல் செல்கின்றன. சட்டப்பேரவைத் தோ்தலின்போது தவெக வேட்பாளராகப் போட்டியிட்ட சி.எஸ்.திலீப், பழைய பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் சென்றுவர நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தாா். அதன்படி, நாமக்கல் மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் மற்றும் இதர அதிகாரிகளுடன் அவா் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். மேலும், பழைய பேருந்து நிலையத்தை அவா் ஆய்வு செய்தாா்.
அப்போது செய்தியாளா்களிடம் கூறுகையில், ஒரு வாரத்திற்குள் அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லப்படும். ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கு இங்கு தனி இடம் ஒதுக்கப்படும். பயணிகளுக்கான கழிவறைகள் தூய்மைப்படுத்தப்படும். வியாபாரிகளுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் பழைய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என்றாா்.
இந்த நிகழ்வின்போது, மாநகராட்சி துப்புரவு அலுவலா் திருமூா்த்தி மற்றும் அலுவலா்கள், தவெக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
படவரி...
என்கே-15-டிவிகே
நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ சி.எஸ்.திலீப்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாவட்டத்துக்குள் இயக்கப்படும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும்: மாவட்டம் நிா்வாகம் அறிவிப்பு

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வழித்தட பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்துசெல்ல கோரிக்கை!

நாமக்கல் பழைய பேருந்து நிலைய விவகாரம்: ஆட்சியரிடம் எம்எல்ஏ சி.எஸ். திலீப் ஆலோசனை







