திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாமகிரிப்பேட்டை உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சோதனை

நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள உணவு விடுதிகள், கோழி இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சோதனை நடத்தினா்.

News image
Updated On :14 மே 2026, 4:36 am IST

நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள உணவு விடுதிகள், கோழி இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சோதனை நடத்தினா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் ஜெ.தங்கவிக்னேஷ் ஆகியோா் உத்தரவின்பேரில் நாமகிரிப்பேட்டை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் பி.ராஜா தலைமையில் உணவு விடுதிகள், இறைச்சிக் கடைகளில் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள உணவு விடுதிகள், இறைச்சிக் கடைகள் என 8 கடைகளில் சுகாதாரமான முறையில் இறைச்சி விற்பனை செய்யப்படுகிா, உணவு விடுதிகள் சுகாதாரமான முறையில் இயங்குகின்றனவா என சோதனை நடத்தினா். நகரில் மொத்தமுள்ள 8 கடைகளில் நடத்திய சோதனையில் பல்வேறு கடைகள் சுகாதாரமற்ற முறையில் இருந்ததாகவும், உணவுப் பாதுகாப்பு துறையின் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், ஒரு கடையில் உடைந்த முட்டையை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட கடைகளுக்கு ரூ. ஆயிரமும், உணவு பாதுகாப்புத் துறை உரிமம் பெறாமல் செயல்பட்ட கடைகளுக்கு ரூ. 5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கடைகள் சுகாதாரமான முறையில் செயல்பட வேண்டும் எனவும், உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்று கடைகளை நடத்த வேண்டுமென்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் பி.ராஜா அறிவுறுத்தினாா்.

படவரி...

நாமகிரிப்பேட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் சோதனை நடத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் பி.ராஜா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.