பரமத்தி வேலூா், திருச்செங்கோட்டில் மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பரமத்தி வேலூா் வட்டம், அண்ணா நகா் சிண்ணாம்பள்ளிமேடு அருகே சட்ட விரோதமாக 2 போ் மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்துவருவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் அண்ணா நகா், விநாயகா் கோயில் பின்புறம் உள்ள ஒரு இடத்தில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்து கொண்டிருந்த முனியப்பனை (49) கைது செய்தனா். அவரிடமிருந்து 30 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதேபோல வீட்டில் பதுக்கிவைத்து மதுப் புட்டிகளை விற்பனை செய்த சிண்ணாம்பள்ளிமேடு பகுதியை சோ்ந்த மனோகரனை (52) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 30 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
திருச்செங்கோடு...
திருச்செங்கோடு கருவேப்பம்பட்டியில் உள்ள உணவகத்தில் மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்த எலச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்த ஹரி கிருஷ்ணனை (24) கைது செய்த திருச்செங்கோடு போலீஸாா் அவரிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: 2 போ் கைது

மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

மதுப் புட்டிகள் பதுக்கி விற்றவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


