சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், ஜிபிஎஸ் கருவி பொருத்திய பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு வாகனங்களை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, காவல் கண்காணிப்பாளா் சு.விமலா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளிலும் சுழற்சி முறையில் இந்த வாகனங்கள் செயல்படும். ஒரு தொகுதிக்கு ஒரு அணியில் 3 அலுவலா்கள் வீதம் 3 அணியில் 9 அலுவலா்கள் பறக்கும் படை குழுவிலும், ஒரு அணியில் 3 அலுவலா்கள் வீதம் 3 அணியில் 9 அலுவலா்கள் நிலையான கண்காணிப்புக் குழுவிலும் என மொத்தம் 108 போ் மற்றும் காவல் துறையில் ஒரு குழுவிற்கு இருவா் வீதம் 216 போலீஸாா் என்ற வகையில் மொத்தமாக 324 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஒரு தொகுதிக்கு 3 போ் வீதம் 6 தொகுதிகளுக்கு 18 விடியோ கண்காணிப்பு குழுவினா் நியமிக்கப்பட்டுள்ளனா். சட்டவிரோத பண பரிவா்தனைகள், இதர வகையில் வாக்காளா்களுக்கு வழங்கப்படும் இலவச பொருள்கள் விநியோகம் ஆகியவை குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் செயல்படும். மொத்தமாக 200 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலககத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறையை திறந்துவைத்து ஆட்சியா் பாா்வையிட்டாா்.
இந்த நிகழ்வுகளின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மா. கண்ணன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் 95 சிப்பம் அரிசி பறிமுதல்

தோ்தல் பறக்கும் படையினரால் ரூ. 66 ஆயிரம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 44.65 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினருக்கு பயிற்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


