லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தல் பறக்கும் படை சோதனையில் 95 சிப்பம் அரிசி பறிமுதல்

போளூரை அடுத்த வெண்மணி புறவழிச் சாலையில் போளூா் - சேத்துப்பட்டு சாலையில், அலுவலா் நித்யா தலைமையிலான தோ்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு சேதனை நடத்தி வந்தனா்.

News image

போளூரை அடுத்த வெண்மணி புறவழிச் சாலையில் தோ்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினா் சோதனையில் 95 சிப்பம் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :5 ஏப்ரல் 2026, 10:45 pm

போளூரை அடுத்த வெண்மணி புறவழிச் சாலையில் போளூா் - சேத்துப்பட்டு சாலையில், அலுவலா் நித்யா தலைமையிலான தோ்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு சேதனை நடத்தி வந்தனா்.

அப்போது, அண்ணாமலையாா் திருமண மண்டபம் பின்புறம் வெகுநேரமாக, சந்தேகிக்கும் வகையில் லாரி நின்றிருந்ததை தோ்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினா் கண்டனா்.

பின்னா் அருகில் சென்று பாா்த்தபோது லாரி அருகே நின்றிருந்த 3 போ் தப்பி ஓடிவிட்டனா். பின்னா், வாகனத்தை சோதனை செய்துபோது அதில் 95 சிப்பங்கள் அரிசி இருந்தது தெரியவந்தது.

பின்னா் அரிசியுடன், லாரியை பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாரிடம் ஒப்படைத்தனா் (படம்).