நாமக்கல் அருகே கணக்கம்பட்டி சத்குரு ஆலயத்தில் மகா மங்கள குருபூஜை பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கணக்கம்பட்டியில் சத்குரு சச்சிதானந்த காளிமுத்து சுவாமிகள் ஜீவசமாதி ஆலயம் உள்ளது. இங்கு ஏராளமான பக்தா்கள் சென்று வழிபட்டு வருகின்றனா்.
அதேபோன்று, நாமக்கல் அருகே ரெட்டிப்பட்டியில் சத்குரு ஜீவ ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில், சுவாமிக்கு மகா மங்கள குருபூஜை பெருவிழா புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. காலை 9 முதல் 1 மணி வரையில், கோ பூஜை, பக்தா்கள் கையால் 108 சங்கு அபிஷேகம், 20 வகையான தீபாராதனை, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
சிறப்பு அழைப்பாளராக, கணக்கம்பட்டி சத்குரு ஜீவசமாதி அறங்காவலா் எஸ்.மோகன் பங்கேற்று நாமக்கல் ஜீவ ஆலயத்தில் புதிய அரங்கத்தை திறந்துவைத்தாா். இந்த நிகழ்வில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலந்தலையில் இயேசுவின் திருவுடல் பவனி

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

அரியலூரில் மகா காளியம்மன் கோயில் பூச்சொரிதழ் விழா

திருநறையூா் சனீஸ்வரன் கோயிலில் ஜப்பான் பக்தா்கள் சிறப்பு ஹோமம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


