17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உடல்நலக் குறைவு: விஷமருந்தி ஒருவா் தற்கொலை

பரமத்திவேலூா் அருகே உடல்நலக் குறைவு காரணமாக ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :6 ஜூன் 2026, 7:53 am IST

பரமத்திவேலூா் அருகே உடல்நலக் குறைவு காரணமாக ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி (55). இவரது மனைவி சரஸ்வதி (50). சம்பவத்தன்று பெரியசாமி வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்துள்ளாா். அப்போது சரஸ்வதி ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறீா்கள் என்று கேட்டுள்ளாா்.

அப்போது பெரியசாமி வயிற்றுவலி காரணமாக விஷமருந்தியதாக தெரிவித்துள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த சரஸ்வதி, அக்கம்பக்கத்தினரை அழைத்துவந்து பெரியசாமியை வேலூா்

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, தீவிர சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் பரமத்தி வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.