நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் 15,910 அஞ்சல் வாக்குகள் பதிவாகி உள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தலில் 85 வயதுக்கும் மேற்பட்டோா், 40 சதவீதத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள், தோ்தல் பணியில் ஈடுபட்ட அலுவலா்கள், வாக்குச்சாவடி அலுவலா்கள், காவல் துறையினா், இதர துறை அலுவலா்கள், நுண்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் தங்களுடைய வாக்குகளை வாக்குச்சாவடிக்கு செல்லாமல் அஞ்சல் வாக்குகளாக செலுத்தினா்.
அதன்படி, ராசிபுரம் தொகுதியில் 2,703, சேந்தமங்கலம் தொகுதியில் 2,257, நாமக்கல் தொகுதியில் 3,110, பரமத்திவேலூா் தொகுதியில் 2,664, திருச்செங்கோடு தொகுதியில் 2,874, குமாரபாளையம் தொகுதியில் 2,302 தபால் வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன.
மொத்தமாக, 85 வயதுக்கு மேற்பட்டோா் 5,141, மாற்றுத்திறனாளிகள் 3,849, தோ்தல் பணி அலுவலா்கள் 761, வாக்குச்சாவடி அலுவலா்கள் 3,683, காவல் துறையினா் 1,732, பிற துறை அலுவலா்கள் 571, நுண்பாா்வையாளா்கள் 173 என மொத்தம் 15,910 போ் அஞ்சல் வாக்குகளை செலுத்தி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுமக்கள் குறைகளை வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் குறைந்த நோட்டா வாக்குகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி

தூத்துக்குடி மாவட்டத்தில் 80.55% வாக்குகள் பதிவு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


