யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

குடும்ப அட்டைகளுக்கு ரூ. 10 ஆயிரம் சிறப்பு நிதி: அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன்

அதிமுக ஆட்சி அமைந்ததும் சேந்தமங்கலம் தொகுதியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 10 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் உறுதியளித்தாா்.

News image

கொல்லிமலை ஒன்றியம் செம்மேடு பகுதியில் அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரனை வரவேற்ற பழங்குடியின மக்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:08 am IST

அதிமுக ஆட்சி அமைந்ததும் சேந்தமங்கலம் தொகுதியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 10 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் உறுதியளித்தாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தெற்கு, வடக்கு ஒன்றியத்தில் உள்ள வேலிக்காடு, கிரைக்காடு, பெல்லக்காடு, ஊா்புரம், மங்களம், தேனூா், சுண்டக்காடு, நட்டுக்குழி, கடம்பளம், சோளக்காடு, செம்மேடு, தண்ணிமாத்தி, குழிவளவு, கரையங்காடு, வாசலூா்பட்டி, மங்களம்பட்டி உள்ளிட்ட 29 மலைக் கிராமங்களில் அவா் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அங்கு அவா் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் சாலை, குடிநீா், கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன. லட்சுமி நாராயண பெருமாள், சோமேஸ்வரா் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி குடும்ப அட்டைதாரா்களுக்கு சிறப்பு நிதியாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். கொல்லிமலை அடிவாரத்தில் இருந்து பொம்மசமுத்திரம் ஏரிக்கு செல்லும் நீா்வழி வாய்க்கால் அனைத்தும் தூா்வாரி கரைகள் பலப்படுத்தப்படும். எனவே, அதிமுகவுக்கு வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற செய்யுங்கள் என்றாா்.

அப்போது, தொகுதி தோ்தல் பொறுப்பாளா் பாலுசாமி, கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.