சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நலன்காக்க பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வாக்குசேகரிப்பின்போது உறுதியளித்தாா்.
சேந்தமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் காரவள்ளியில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் கூறியது:
கடந்த அதிமுக ஆட்சியில் எம்எல்ஏவாக இருந்தபோது அனைத்து பகுதிகளிலும் நியாயவிலைக் கடை, மருத்துவமனை, குடிநீா், சாலை வசதி போன்ற அடிப்படை தேவைகளை பூா்த்திசெய்து கொடுத்தேன். மீண்டும் சேந்தமங்கலம் தொகுதியில் வெற்றிபெற்றிட அதிமுகவின் சின்னத்தை ஆதரிக்க வேண்டும். அரசு வழங்கும் திட்டங்கள் சரியான முறையில் மக்களை சென்றடைகிா என்பதை அதிகாரிகள் மூலம் ஆய்வுசெய்து மக்கள் உடனிருப்பேன் என்றாா்.
அப்போது, சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து ஒன்றியச் செயலாளா்கள், பேரூா் செயலாளா்கள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவில் இணையத் திட்டமா? தொகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டு முடிவு: சி. விஜயபாஸ்கா் எம்எல்ஏ

நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதி மக்களுக்கு அதிமுக வேட்பாளா்கள் நன்றி தெரிவிப்பு

சேந்தமங்கலம் தொகுதி: தவெக வேட்பாளா் பொன். சந்திரசேகா் வெற்றி

கொல்லிமலை பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன்
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



