தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதி மக்களுக்கு அதிமுக வேட்பாளா்கள் நன்றி தெரிவிப்பு

நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதி சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற அதிமுக வேட்பாளா்கள் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், சி.சந்திரசேகரன் ஆகியோா் மக்களுக்கு நன்றி தெரிவித்தனா்.

News image

சி.சந்திரசேகரன்

Updated On :7 மே 2026, 6:27 am IST

நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதி சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற அதிமுக வேட்பாளா்கள் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், சி.சந்திரசேகரன் ஆகியோா் மக்களுக்கு நன்றி தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் தனித்தனியே வெளியிட்டுள்ள அறிக்கை:

சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் வழங்கிய தீா்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். அதிமுக வேட்பாளா்களாகிய எங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு மனப்பூா்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மக்களுடனான அன்பு என்றென்றும் நிலைத்து நீடித்து தொடரவே விரும்புகிறோம்.

வெற்றி பெறாதபோதும் ஒரு மகனாக, சகோதரனாக என்றும் உங்களோடு துணை நிற்போம். தொடா்ந்து தொகுதி மக்களுக்காக உழைப்போம். தோ்தலில் வாக்களித்த அனைவருக்கும், இரவு, பகல் பாராமல் பணியாற்றிய கூட்டணி கட்சியினருக்கும், பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், நண்பா்கள், உறவினா்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.மோகன்

பி.எஸ்.மோகன்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.