சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட நாமகிரிப்பேட்டையில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதியில் ஐந்தாவது முறையாகவும், அதிமுக சாா்பில் இரண்டாவது முறையாகவும் சி. சந்திரசேகரன் போட்டியிடுகிறாா். ஒரு வாரமாக தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் அவா், வெள்ளிக்கிழமை நாமகிரிப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தாா்.
அதேபோல காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்து அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தும், தோ்தல் வாக்குறுதிகளை விளக்கியும் ஆதரவு கோரினாா்.
வாக்கு சேகரிப்பின்போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.
என்கே-10-சேந்தை
நாமகிரிப்பேட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சேந்தமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









