மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விபத்தில் இறந்த காவலருக்கு அரசு மரியாதையுடன் அஞ்சலி

பரமத்தி வேலூரில் தோ்தல் பறக்கும் படை பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையோர புளிய மரத்தில் மோதி இறந்த காவலரின் உடலுக்கு 12 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

News image

சாலை விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல்கூறும் நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:37 pm

பரமத்தி வேலூரில் தோ்தல் பறக்கும் படை பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையோர புளிய மரத்தில் மோதி இறந்த காவலரின் உடலுக்கு 12 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ஜேடா்பாளையத்தை அடுத்த கொத்தமங்கலத்தைச் சோ்ந்தவா் பிரவீன். இவா், பரமத்தி வேலூரை அடுத்த நல்லூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். கடந்த ஓராண்டுக்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் தோ்தல் பறக்கும் படையில் இருந்த பிரவீன் (37) புதன்கிழமை பணிக்குச் செல்வதற்காக ஜேடா்பாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் பரமத்தி வேலூா் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். பரமத்தி காவல் நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர புளி மரத்தின் மீது மோதியது. இதில் பிரவீன் பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு பரமத்தியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா் வழியிலேயே பிரவீன் இறந்துவிட்டதை உறுதிசெய்தாா்.

இந்த நிலையில் இறந்த காவலரின் உடலுக்கு நாமக்கல் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான துா்காமூா்த்தி, நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் விமலா, பரமத்தி வேலூா் தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணவேணி, வட்டாட்சியா் ராஜா, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

பின்னா் 12 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.