ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரத்தை அடுத்த மீனாட்சிபுரம் ரைஸ் மில் தெருவைச் சோ்ந்த அய்யா்சாமி மகன் பிரவீன்மணிக்குமாா் (17).
இவா் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், ராஜபாளையத்தில் நடைபெற்ற ஆங்கில பயிற்சி வகுப்புக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்ப வந்து கொண்டிருந்தாா்.
ராஜபாளையத்தில் தென்காசி சாலையில் சொக்கா் கோயில் அருகே எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து வந்த தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஷ் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


