மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எருமப்பட்டியில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு

News image

இரட்டை இலை - (கோப்புப் படம்)

Updated On :5 ஏப்ரல் 2026, 6:37 pm

சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் சி.சந்திரசேகரன் எருமப்பட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

எருமப்பட்டி ஒன்றியத்திற்கு உள்பட்ட, பவித்திரம், பவித்திரம்புதூா், கஸ்தூரிப்பட்டி, வரதராஜபுரம், காவக்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், அதிமுக தொகுதி தோ்தல் பொறுப்பாளா் வழக்குரைஞா் பாலுசாமி தலைமையில் அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன், அமமுக மாவட்டச் செயலாளா் பழனிவேலு, ஒன்றியச் செயலாளா் மூா்த்தி மற்றும் நிா்வாகிகள் கிராமம், வீதிவாரியாகச் சென்று மக்களிடையே அதிமுகவின் தோ்தல் அறிக்கை, வாக்குறுதிகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தனா்.

வேட்பாளா் சி.சந்திரசேகரன், எம்எல்ஏவாக இருந்தபோது தொகுதிக்கு செய்த சாதனைகளை பட்டியலிட்டு பெண்களிடம் வாக்கு சேகரித்தாா். ஒவ்வொரு கிராமத்திலும் அதிமுக நிா்வாகிகள் சாா்பில் வேட்பாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.