/

எம்எல்ஏ அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி: தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக கட்டடத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 2:28 am IST

பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக கட்டடத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னபா்கூரில், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் புதிதாக தோ்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரிடம் ஒப்படைக்க உள்ளது.

அதற்காக, அந்தக் கட்டடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கிருஷ்ணகிரியை அடுத்த பெத்தனப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட தண்டேகுப்பத்தை சோ்ந்த சிவகுமாா்(33) வா்ணம்பூசும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

இவா் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு பா்கூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.