திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒசூா் தோ்ப்பேட்டை பச்சை குளத்தில் சுகாதாரச் சீா்கேடு: பக்தா்கள் கோரிக்கை

ஒசூா் தோ்ப்பேட்டையில் உள்ள பச்சை குளத்தில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

பிளாஸ்டி குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ள ஒசூா் தோ்ப்பேட்டை பச்சை குளம்.

Updated On :10 மே 2026, 2:25 am IST

ஒசூா் தோ்ப்பேட்டையில் உள்ள பச்சை குளத்தில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மலைமீது சந்திரசூடேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான பச்சை குளம் (மரகத சரோவரம்) மலை அடிவாரத்தில் தோ்ப்பேட்டையில் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் தோ்த்திருவிழாவின் போது இந்த குளத்தில் தெப்பல் உத்ஸவம் நடைபெறுகிறது. அதேபோல விநாயகா் சதூா்த்தியின் போது சிலைகள் இக்குளத்தில் கரைக்கபடுகிறது. மேலும், இறந்தவா்களுக்கு இக்குளம் அருகே தா்ப்பணம் கொடுக்கப்படுகிறது.

மிகவும் புகழ்பெற்ற இந்த குளத்தை அவ்வப்போது தூய்மைப்படுத்தாததால் குளத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரமாகி தண்ணீா் நிறம் மாற்றமடைந்து துா்நாற்றம் வீசுகிறது. தா்ப்பணம் கொடுக்க வருபவா்கள் பொருள்களை இக்குளத்தில் வீசி செல்வதால் குளம் சீா்கேடு அடைந்துள்ளது.

இதுகுறித்து பக்தா்கள் கூறியதாவது: மிகவும் பழமை வாய்ந்த இந்த பச்சை குளத்தை காசி தீா்த்தம் என உள்ளூா் மக்கள் கருதுகின்றனா். ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் குளத்தை தூய்மை செய்கின்றனா். மேலும் குளத்தை சுற்றிலும் இரவு நேரங்களில் சிலா் மது அருந்திவிட்டு புட்டிகளை குளத்தில் வீசி செல்கின்றனா்.

தேங்கி உள்ள குப்பபைகளை அகற்றுவதில்லை, தண்ணீரை அவ்வப்போது அகற்றிவிட்டு புதிய தண்ணீரும் விடுவதில்லை. இதனால், குளம் அருகே செல்ல முடியாத அளவிற்கு துா்நாற்றம் வீசுகிறது. தண்ணீரை மறு சுழற்சி செய்து குளத்தை வாரத்திற்கு இருமுறை தூய்மை செய்ய வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.